Thursday, June 6, 2013

சின்னஞ்சிறு விதைகள்...

உடல் அளவுக்குமேல் உயரம் தாண்ட முடியாது. ஆனால் மன உறுதி இருந்தால் எவ்வளவு உயரத்தையும் தாண்ட முடியும் 
                                                     *** 

ஏக்கமே மனிதனின் எதிரி. ஏமாற்றமே நமது துரோகி 
                                                      *** 

எல்லோருமே எப்போதுமே பலசாலி அல்ல . சில நேரங்களில் பலவீனமும் தெரிந்துவிடும்
                                                       *** 

தனிமனிதனின் மனமே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது அதைதொடர்ந்தே வாழ்கையும் நகருகிறது 
                                                       *** 

விருப்பபட்டு உதவுவதே புண்ணியமாகும் 
 வெறுப்புடன் கொடுப்பது கேவலமாகும்
                                                          *** 

கஷ்டப்படும்போது உதவாமல் நலமா என்பது கோழையின் செயல்
                                                          *** 

பணமும் மனமும் ஒரே இடத்தில் தங்குவதில்லை 
 மாறிக்கொண்டே இருக்கும் மாய உலகம் 
                                                           *** 

சிந்திக்கத் தெரிந்தவன் சிரிப்பதில்லை 
சிரிக்கதெரிந்தவன் சிந்திக்கவில்லை
                                                           *** 

மன்னிக்கத் தெரிந்த மனிதனை மகானாகப் போற்றலாம் 
                                                   ***********

2 comments:

  1. அனைத்தும் அருமை... முக்கியமாக தனிமனிதனின் மனமே...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கு நன்றிங்க தனபாலன்

    ReplyDelete