Tuesday, June 4, 2013

இப்படியும் சிலபேர் ...

        வெற்றிகரமான வாழ்க்கை என்பது நாம் வாழ்ந்து முடிந்தக் காலத்தின் அழியா சுவடுகள்.பிறப்பு இறப்பு ரெண்டுமே செய்தியாகிறது இன்னாருக்கு இவன் பிறந்தான் இப்படித்தான் இவர் இறந்தார் என்று எல்லோரும் ஒரு கதையை அறிவிப்பாக சொல்லுவதுண்டு .

        ஆனால் இடைப்பட்ட காலங்களில் செய்த செயல் என்ன வாழ்ந்த வாழ்க்கை எப்படி என்று நம் இறந்த பின்பும் எல்லோரும் மெச்சும்படியாக இருக்க வேண்டும் .ஏதோ பிறந்தான் வளர்ந்தான் என்னமோ வாழ்ந்தான் என்று சொல்லக் கூடாது.

        நாம் என்ன விட்டுச் செல்கிறோம் அது யாருக்கு பெருமையோ சிறுமையோ சேர்க்கிறது என்பதை தெளிவாய் புரிய வைத்து செல்ல வேண்டும்.வாழும் காலத்தில் தான் மட்டுமே சாப்பிட்டு பிறரைப் பற்றிக் கவலைபடாது இருப்பது மனித வாழ்க்கை ஆகாது.

      நம்மோடு நாலுபேர் சேர்ந்து வாழ வேண்டும் வளர வேண்டும்.நமது குடும்ப வாழ்கையை எல்லோரும் வாழ்த்தும்படி வாழ்ந்தாலேசிறப்பான வாழ்க்கை.

இருக்கும் வரை நிம்மதியாய் இருங்கள் இறுதிவரை உதவியாய் இருங்கள்.

கொடுத்து வாழுங்கள் கெடுத்து வாழாதீர்கள்.

பேர்சொல்லும்படி வாழுங்கள்
 ஊர் தூற்ற வாழாதீர்கள்.

மகிழ்ச்சியாய் வாழுங்கள் மன நிறைவோடு வாழ்த்துங்கள்



7 comments:

  1. மகிழ்ச்சியாய் வாழுங்கள் மன நிறைவோடு வாழ்த்துங்கள்

    வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிங்கம்மா

      Delete
  2. புதுத் தளத்துக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சொன்ன விதம் அருமை ஐயா...

    தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே.வருகைக்கு நன்றி

      Delete
  4. பாதையை இடறும் கற்கள் படிக்கற்கள் ஆக வேண்டும்.
    பாதையில் தடம் பதித்து பயணத்தை முடிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா..அருமை.சரியாகச் சொன்னீர்கள்

      Delete