Friday, June 28, 2013

பிறந்தநாள் திருத்தங்கள்






யாருக்காய் பிறந்தேன்
எதற்காய் வளர்ந்தேன்
பேருக்காய் கவித்தேன்
பெருமையாய் படைத்தேன்

வரும் சூலை மாதம்
பத்துக்குபிறகு பதினொன்றில்
எட்டிவைக்கும் பிறந்தநாள்
எதற்காய் வருகிறது
என்ன எனக்குத் தரவிருக்கிறது

எதையும் நோக்கவில்லை
எப்படியும் வாழ்ந்திடுவேன்
இருக்கும்வரை முடிந்தவரை
இயன்ற உதவி செய்திடுவேன்

நாலுபேருக்கு நன்மையாக
நாலுவார்த்தைச் சொல்லியே
ஊருப் பார்க்க வாழ்ந்திடுவேன்
உத்தமனாய் மகிழ்ந்திடுவேன்

14 comments:

  1. நல்ல எண்ணங்களுக்கும், வரும் பிறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நாளிருக்கு இப்போ என்ன அவசரம்

      Delete
  2. அருமையான கவிதை ... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

      Delete
  3. பிறந்த நாளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. இப்போதே என்ன அவசரம் தம்பி

      Delete
  4. ஒரு வெளம்பரமோ!?

    ReplyDelete
    Replies
    1. ஆமா,மவுண்ட் ரோடுல கட்டுங்க

      Delete
  5. ''..நாலுபேருக்கு நன்மையாக
    நாலுவார்த்தைச் சொல்லியே
    உத்தமனாய் மகிழ்ந்திடுவேன்...''
    Best wishes,
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா வெற்றியின் பாட்டியே நன்றிங்கம்மா

      Delete
  6. முன்கூட்டியே வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஆசிர்வாதம்தான் வேண்டுமைய்யா

      Delete
  7. பிறந்தநாள் வாழ்த்துகள், கண்ணதாசன்!
    நாலுபேருக்கு நல்ல வார்த்தை சொல்லி வாழுங்கள் - அதுதான் நீங்கள் பிறந்த பயன்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நாள் இருக்கிறது.அதற்குள் என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ?

      Delete