யாருக்காய் பிறந்தேன்
எதற்காய் வளர்ந்தேன்
பேருக்காய் கவித்தேன்
பெருமையாய் படைத்தேன்
வரும் சூலை மாதம்
பத்துக்குபிறகு பதினொன்றில்
எட்டிவைக்கும் பிறந்தநாள்
எதற்காய் வருகிறது
என்ன எனக்குத் தரவிருக்கிறது
எதையும் நோக்கவில்லை
எப்படியும் வாழ்ந்திடுவேன்
இருக்கும்வரை முடிந்தவரை
இயன்ற உதவி செய்திடுவேன்
நாலுபேருக்கு நன்மையாக
நாலுவார்த்தைச் சொல்லியே
ஊருப் பார்க்க வாழ்ந்திடுவேன்
உத்தமனாய் மகிழ்ந்திடுவேன்
நல்ல எண்ணங்களுக்கும், வரும் பிறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteஇன்னும் நாளிருக்கு இப்போ என்ன அவசரம்
Deleteஅருமையான கவிதை ... வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
Deleteபிறந்த நாளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்
ReplyDeleteஇப்போதே என்ன அவசரம் தம்பி
Deleteஒரு வெளம்பரமோ!?
ReplyDeleteஆமா,மவுண்ட் ரோடுல கட்டுங்க
Delete''..நாலுபேருக்கு நன்மையாக
ReplyDeleteநாலுவார்த்தைச் சொல்லியே
உத்தமனாய் மகிழ்ந்திடுவேன்...''
Best wishes,
Vetha.Elangathilakam.
நன்றிங்கம்மா வெற்றியின் பாட்டியே நன்றிங்கம்மா
Deleteமுன்கூட்டியே வாழ்த்துகள்!
ReplyDeleteஎனக்கு ஆசிர்வாதம்தான் வேண்டுமைய்யா
Deleteபிறந்தநாள் வாழ்த்துகள், கண்ணதாசன்!
ReplyDeleteநாலுபேருக்கு நல்ல வார்த்தை சொல்லி வாழுங்கள் - அதுதான் நீங்கள் பிறந்த பயன்.
இன்னும் நாள் இருக்கிறது.அதற்குள் என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ?
Delete