யாருக்காய் பிறந்தேன்
எதற்காய் வளர்ந்தேன்
பேருக்காய் கவித்தேன்
பெருமையாய் படைத்தேன்
வரும் சூலை மாதம்
பத்துக்குபிறகு பதினொன்றில்
எட்டிவைக்கும் பிறந்தநாள்
எதற்காய் வருகிறது
என்ன எனக்குத் தரவிருக்கிறது
எதையும் நோக்கவில்லை
எப்படியும் வாழ்ந்திடுவேன்
இருக்கும்வரை முடிந்தவரை
இயன்ற உதவி செய்திடுவேன்
நாலுபேருக்கு நன்மையாக
நாலுவார்த்தைச் சொல்லியே
ஊருப் பார்க்க வாழ்ந்திடுவேன்
உத்தமனாய் மகிழ்ந்திடுவேன்